கவிதைகளுக்குக்
கால் முளைத்தது போன்றே
தான் இருக்கின்றன
நம் சாயங்கால நடைகளின் நிழல்கள்....
தீரத் தீரப்
பேசுகிறோம் --
மௌனமாய்----
நாம் விலக்கி வைத்த சொற்கள்
அத்தனையும்
எதிரே விரிந்திருக்கும்
அந்த மைதானத்தில்
அந்தர ஊஞ்சல் ஆடுகின்றன....
தூரமாய்,
விரிந்து பரந்து
சதா நிறம் மாறிடும் வானம்
சாட்சியாய் நிற்கிறது....
தினம் தினம்
மாறிப் போகும்
நம் வாழ்க்கையின்
வண்ணங்களுக்கு!
எல்லாம் கலந்த வெண்மையும்
ஏதுமற்ற கருமையும்
எளிதில் சாத்தியம் அதற்கு!
நமக்கு??!
நன்றி: கூகுள் படங்கள்.
நன்றி: முக நூல்.
கால் முளைத்தது போன்றே
தான் இருக்கின்றன
நம் சாயங்கால நடைகளின் நிழல்கள்....
தீரத் தீரப்
பேசுகிறோம் --
மௌனமாய்----
நாம் விலக்கி வைத்த சொற்கள்
அத்தனையும்
எதிரே விரிந்திருக்கும்
அந்த மைதானத்தில்
அந்தர ஊஞ்சல் ஆடுகின்றன....
தூரமாய்,
விரிந்து பரந்து
சதா நிறம் மாறிடும் வானம்
சாட்சியாய் நிற்கிறது....
தினம் தினம்
மாறிப் போகும்
நம் வாழ்க்கையின்
வண்ணங்களுக்கு!
எல்லாம் கலந்த வெண்மையும்
ஏதுமற்ற கருமையும்
எளிதில் சாத்தியம் அதற்கு!
நமக்கு??!
நன்றி: கூகுள் படங்கள்.
நன்றி: முக நூல்.
No comments:
Post a Comment